மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 2,548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 2,548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 - 19ம் நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதல். ஒசூர் முதல் கர்நாடக மாநிலம் பையபனஹள்ளி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 376 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 3,198 கி.மீ., தூரத்திற்கு ரூ. 20,064 கோடி மதிப்பிலான 27 திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
அண்டை மாநிலங்களான கர்நாடகாவிற்கு ரூ, 3,353 கோடியும், கேரளாவிற்கு ரூ. 923 கோடியும் ரயில்வே துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 - 19ம் நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதல். ஒசூர் முதல் கர்நாடக மாநிலம் பையபனஹள்ளி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 376 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 3,198 கி.மீ., தூரத்திற்கு ரூ. 20,064 கோடி மதிப்பிலான 27 திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
அண்டை மாநிலங்களான கர்நாடகாவிற்கு ரூ, 3,353 கோடியும், கேரளாவிற்கு ரூ. 923 கோடியும் ரயில்வே துறை ஒதுக்கீடு செய்துள்ளது.