அனைத்து கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி அரசு அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வு 20-ந் தேதி முதல் நடைமுறைக்கும் வந்தது. ஆனால், அபரிமிதமான கட்டண உயர்வு என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. 

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வரும் 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும். சிறையில் உள்ள மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராடி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...