மின் கம்பத்தை அருகில் இருக்கும் கட்டிடத்தோடு கட்டி வைத்துப் பராமரித்து வருகிறது தமிழ மின்வாரியம்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் தனியாருக்கு சொந்தமான சீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் கடந்த சில நாட்களாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனைத்தொடந்து, அந்த மின் கம்பத்தை அருகில் இருக்கும் கட்டிடத்தோடு கட்டி வைத்துப் பராமரித்து வருகிறது தமிழக மின்வாரியம்.

அப்பகுதியில் நடைபாதை வழியாக செல்லும் பொதுமக்கள் 'கரணம் தப்பினால் மரணம்' என்ற அச்சத்தில் இதனைக் கடந்து சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் இது போன்ற பகுதிகளில் பழுதடைந்த மற்றும் விழப்போகும் தருவாயில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.