தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.
திருப்பூர்: தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.
கோவில்பாளையம் நடுத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி வெங்கிடம்மாள். கணவரை இழந்து தனியாக வசித்துவரும் இவர் 30 ஆடுகளும் 5 மாடுகளும் வளர்த்து வருகிறார். தற்போது மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் காய்ந்து போயிருப்பதால் வெங்கிடம்மாள் தனது கால்நடைகளுக்குத் தீவனமாக கழிவு பஞ்சுகளை கிலோ 15 ரூபாய் விலைகொடுத்து வாங்கி ஆடு, மாடுகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு வெங்கிடம்மாள் தனது ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். திடீரென அதிகாலையில் ஆடுகள் பலத்த சத்தம் போடுவதை கேட்ட அவர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது பட்டிக்குள் இருந்த ஆடுகளை மூன்று வெறிநாய்கள் கடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரின் உதவியோடு நாய்களை விரட்டினார்.

தொடர்ந்து, பட்டிக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 15 ஆடுகள் பலியாகியதும் மேலும் 5 ஆடுகள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், கணவரை இழந்த தனக்கு கால் நடைகள் தான் வாழ்வாதாரமாக இருந்தது என்றும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிர்ழந்ததால் தமிழக அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பாளையம் நடுத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி வெங்கிடம்மாள். கணவரை இழந்து தனியாக வசித்துவரும் இவர் 30 ஆடுகளும் 5 மாடுகளும் வளர்த்து வருகிறார். தற்போது மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் காய்ந்து போயிருப்பதால் வெங்கிடம்மாள் தனது கால்நடைகளுக்குத் தீவனமாக கழிவு பஞ்சுகளை கிலோ 15 ரூபாய் விலைகொடுத்து வாங்கி ஆடு, மாடுகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு வெங்கிடம்மாள் தனது ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். திடீரென அதிகாலையில் ஆடுகள் பலத்த சத்தம் போடுவதை கேட்ட அவர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது பட்டிக்குள் இருந்த ஆடுகளை மூன்று வெறிநாய்கள் கடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரின் உதவியோடு நாய்களை விரட்டினார்.

தொடர்ந்து, பட்டிக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 15 ஆடுகள் பலியாகியதும் மேலும் 5 ஆடுகள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், கணவரை இழந்த தனக்கு கால் நடைகள் தான் வாழ்வாதாரமாக இருந்தது என்றும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிர்ழந்ததால் தமிழக அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.