கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : கோவை அருகே டிப்பர் லாரி மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருமத்தம்பட்டியில் இன்று காலை சாலையை கடக்கும் போது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் சாலையை கடக்க நிற்பதும், சர்வீஸ் ரோடு என்பதால் ஒரு வழிப்பாதை இரு வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக வரும் டிப்பர் லாரி அந்த பெண் மீது மோதி செல்வதும் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, கருமத்தம்பட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை குறுகியதே விபத்திற்கு காரணம் எனவும், இதனால், காலை, மாலையில் செல்லும் பள்ளி கல்லூரி, மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சாலை குறுகியதன் காரணமாக கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உடனடியாக சாலையை விரிவாக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கருமத்தம்பட்டியில் இன்று காலை சாலையை கடக்கும் போது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் சாலையை கடக்க நிற்பதும், சர்வீஸ் ரோடு என்பதால் ஒரு வழிப்பாதை இரு வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக வரும் டிப்பர் லாரி அந்த பெண் மீது மோதி செல்வதும் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, கருமத்தம்பட்டி நான்குமுனை சந்திப்பில் சாலை குறுகியதே விபத்திற்கு காரணம் எனவும், இதனால், காலை, மாலையில் செல்லும் பள்ளி கல்லூரி, மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சாலை குறுகியதன் காரணமாக கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உடனடியாக சாலையை விரிவாக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.