தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர்: தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் பெண் உரிமை தொடர்பான வேடமணிந்தும், கோஷங்களையும் எழுப்பியவாறே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக சிக்கண்ணா கல்லூரியில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கல்லூரி சாலை வழியாகச் சென்ற பேரணி சவுடாம்பிகா திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில், கலந்துகொண்டவர்கள் பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் பெண் உரிமை தொடர்பான வேடமணிந்தும், கோஷங்களையும் எழுப்பியவாறே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக சிக்கண்ணா கல்லூரியில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கல்லூரி சாலை வழியாகச் சென்ற பேரணி சவுடாம்பிகா திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில், கலந்துகொண்டவர்கள் பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.