நாகை மாவட்டத்தில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் வேடம் அணிந்தது போன்று, அலங்காரம் செய்த 2 குருக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் வேடம் அணிந்தது போன்று, அலங்காரம் செய்த 2 குருக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நமது கலாச்சாரத்தின்படி, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கடவுள் என்றால் சீலை மற்றும் நகைகளை அணிந்தவாறு தோற்றத்துடன் இருப்பதுதான் ஐதீகம். இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது.
இந்த அம்மனுக்கு, கோவிலின் குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்துள்ளனர். இதனை, கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், ராஜ், கல்யாணம் ஆகிய இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
நமது கலாச்சாரத்தின்படி, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் கடவுள் என்றால் சீலை மற்றும் நகைகளை அணிந்தவாறு தோற்றத்துடன் இருப்பதுதான் ஐதீகம். இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது.
இந்த அம்மனுக்கு, கோவிலின் குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்துள்ளனர். இதனை, கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், ராஜ், கல்யாணம் ஆகிய இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகம விதிகளை மீறி இருவரும் செயல்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.