பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக முனைவர் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.
கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக முனைவர் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.
கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், துணைவேந்தர் கணபதிக்கு பணம் பெற்று தந்ததாக அப்பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், துணைவேந்தர் கணபதி லட்சக்கணக்கில் பணம் பெற்று விதிமுறைகளை மீறி பணி நியமனங்கள் செய்து இருப்பதாகவும், அவற்றை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்த முனைவர் பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் கணபதி நியமித்ததாகவும், இந்த முறைகேடுகளில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவினர், தேர்வு குழுவினர், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உண்டு எனக்கூறிய முனைவர் பட்டதாரிகள், முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மேலும், துணைவேந்தர் கணபதி நியமித்த பணி நியமனங்களை ரத்து செய்வதுடன், நேர்மையான முறையில் மீண்டும் தேர்வு நடத்தி தகுதியான நபர்களுக்குப் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், துணைவேந்தர் கணபதிக்கு பணம் பெற்று தந்ததாக அப்பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், துணைவேந்தர் கணபதி லட்சக்கணக்கில் பணம் பெற்று விதிமுறைகளை மீறி பணி நியமனங்கள் செய்து இருப்பதாகவும், அவற்றை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்த முனைவர் பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் கணபதி நியமித்ததாகவும், இந்த முறைகேடுகளில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவினர், தேர்வு குழுவினர், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு உண்டு எனக்கூறிய முனைவர் பட்டதாரிகள், முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மேலும், துணைவேந்தர் கணபதி நியமித்த பணி நியமனங்களை ரத்து செய்வதுடன், நேர்மையான முறையில் மீண்டும் தேர்வு நடத்தி தகுதியான நபர்களுக்குப் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.