கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.
கோவை: கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டாம்பூச்சி பிரியர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.
கோவை வனத்துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி, நேற்று கோவை வனக் கோட்டத்தில் இந்த கணக்கெடுப்பு முகாம் தொடங்கியது. இதில், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து அறிய வகை பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கோடைக்காலத்தில் 230 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் மற்றும் 79 தட்டாம்பூச்சிகள் இனங்கள் பல பருவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது அறிய வகையிலான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டன.
தற்போது நடைபெறும் கணக்கெடுப்பு முகாமில் 35-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டாம்பூச்சி பிரியர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.
கோவை வனத்துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி, நேற்று கோவை வனக் கோட்டத்தில் இந்த கணக்கெடுப்பு முகாம் தொடங்கியது. இதில், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து அறிய வகை பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கோடைக்காலத்தில் 230 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் மற்றும் 79 தட்டாம்பூச்சிகள் இனங்கள் பல பருவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது அறிய வகையிலான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டன.
தற்போது நடைபெறும் கணக்கெடுப்பு முகாமில் 35-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.