கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார்.
கோவை: கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார்.
அன்னூர் அருகே உள்ள கனுவக்கரையில் கடந்த 26-ம் தேதி ராஜாமணி என்பவரை கொலை செய்த வடமாநில இளைஞர்கள், அவரது கணவர் மயில்சாமிக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றனர். பின்னர், வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, அன்னூர் போலீஸார் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மேற்குவங்கம் சென்றனர். கொள்ளையர்கள் சாம்ராடசகா, பிண்டு மாலிக், அஜய்ராய் ஆகியோரை அம்மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பெண்ணைக் கொலை செய்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் சென்றனர். அங்கிருந்து சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றனர். அவர்களின் ஒரு செல்போன் எண்ணை வைத்து மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
இவர்கள், மூன்று பேர் மீதும் கோவை மாவட்டத்தில் வேறு குற்ற வழக்குகள் இல்லை, வேறு எங்காவது உள்ளதா..? என விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துபவர்கள் அவர்கள் குறித்து முழு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீஸார் தேவையான ஆயுதங்களுடன் சென்றதாகவும், அம்மாநில போலிசாருடன் இணைந்து செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.
அன்னூர் அருகே உள்ள கனுவக்கரையில் கடந்த 26-ம் தேதி ராஜாமணி என்பவரை கொலை செய்த வடமாநில இளைஞர்கள், அவரது கணவர் மயில்சாமிக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றனர். பின்னர், வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, அன்னூர் போலீஸார் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மேற்குவங்கம் சென்றனர். கொள்ளையர்கள் சாம்ராடசகா, பிண்டு மாலிக், அஜய்ராய் ஆகியோரை அம்மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பெண்ணைக் கொலை செய்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் சென்றனர். அங்கிருந்து சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றனர். அவர்களின் ஒரு செல்போன் எண்ணை வைத்து மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
இவர்கள், மூன்று பேர் மீதும் கோவை மாவட்டத்தில் வேறு குற்ற வழக்குகள் இல்லை, வேறு எங்காவது உள்ளதா..? என விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துபவர்கள் அவர்கள் குறித்து முழு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீஸார் தேவையான ஆயுதங்களுடன் சென்றதாகவும், அம்மாநில போலிசாருடன் இணைந்து செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.