மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளைப் பெற மருத்துவ சான்றிதழ் அவசியமாகும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான இருசக்கர வாகனம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் திட்டங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் நீண்ட நேரமாக அலைக்கழித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ் வாங்க வரும் ஒவ்வொரு முறையும் இதேபோன்று அலைக்கழிப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாற்றுத்திறனாளிகளிடம் சமரசம் பேசி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் நாளை சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளைப் பெற மருத்துவ சான்றிதழ் அவசியமாகும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான இருசக்கர வாகனம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் திட்டங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் நீண்ட நேரமாக அலைக்கழித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ் வாங்க வரும் ஒவ்வொரு முறையும் இதேபோன்று அலைக்கழிப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாற்றுத்திறனாளிகளிடம் சமரசம் பேசி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் நாளை சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.