ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
மனிதகுல ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து மகான் அரவிந்தர் எழுத்துகளில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1966-ல் ஆரோவில் குறித்த திட்டம் யுனெஸ்கோ பொதுசபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. ஆரோவில் சர்வதேச நகரம் புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வரும் 28-ம் தேதி ஆரோவில் நகரம் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட ஆரோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஆரோவில் உதய தினாவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக புதுச்சேரி மாநில பா.ஜ.க., தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி புதுச்சேரி வருவது குறித்து பிரதமர் அலுவலகதில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மனிதகுல ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து மகான் அரவிந்தர் எழுத்துகளில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1966-ல் ஆரோவில் குறித்த திட்டம் யுனெஸ்கோ பொதுசபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. ஆரோவில் சர்வதேச நகரம் புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வரும் 28-ம் தேதி ஆரோவில் நகரம் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட ஆரோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஆரோவில் உதய தினாவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக புதுச்சேரி மாநில பா.ஜ.க., தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி புதுச்சேரி வருவது குறித்து பிரதமர் அலுவலகதில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.