காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கேரள நடிகை சரிதாநாயர் உட்பட இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கேரள நடிகை சரிதாநாயர் உட்பட இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளி பகுதியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். நிறுவனங்களில் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் எனபரிடம் ரூ.28 லட்சம் , ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து 4 முறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் ஆஜராகவில்லை.
இதனால், சரிதாநாயர் மற்றும் ரவி இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், வழக்கினை வரும் 8-ம் தேதிக்கும் ஒத்திவைத்து நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளி பகுதியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். நிறுவனங்களில் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் எனபரிடம் ரூ.28 லட்சம் , ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து 4 முறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் ஆஜராகவில்லை.
இதனால், சரிதாநாயர் மற்றும் ரவி இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், வழக்கினை வரும் 8-ம் தேதிக்கும் ஒத்திவைத்து நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார்.