நீலகிரியில் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரியில் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் சரகம் வண்டிசோலை பிரிவு லேம்ஸ்ராக் காவல்பகுதிக்கு உட்பட்ட ஆடர்லிக்கு அருகே முத்தி எஸ்டேட் என்ற தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில், ஆண் சிறுத்தைப்புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவு படி, வனசரக அலுவலர் தலைமையிலான குழு சென்றது. அங்கு, வன உயிரின ஆர்வலர்கள் முன்னிலையில் ஜெகதளா கால்நடை மருத்துவரால் உடற்கூறு பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. பின்னர், சிறுத்தையின் உடல் அந்தப் பகுதியிலேயே எரியூட்டபட்டது.
குன்னூர் சரகம் வண்டிசோலை பிரிவு லேம்ஸ்ராக் காவல்பகுதிக்கு உட்பட்ட ஆடர்லிக்கு அருகே முத்தி எஸ்டேட் என்ற தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில், ஆண் சிறுத்தைப்புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவு படி, வனசரக அலுவலர் தலைமையிலான குழு சென்றது. அங்கு, வன உயிரின ஆர்வலர்கள் முன்னிலையில் ஜெகதளா கால்நடை மருத்துவரால் உடற்கூறு பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. பின்னர், சிறுத்தையின் உடல் அந்தப் பகுதியிலேயே எரியூட்டபட்டது.