பட்ஜெட்டில் புதிய ஊக்கத்தொகை இல்லாதது ஏமாற்றம் : தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

புதிய 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: புதிய 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.



பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றமளிப்பதாகத் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக, அச்சங்கத்தின் தலைவர் கே.கே.ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

புதிய பட்ஜெட்டில் வேளாண் வருவாயினை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைகள் தரமான வேளாண் பம்ப்செட் சந்தையினை மேம்படுத்த வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குள் வரும் 99 நகரங்களை மேம்படுத்த ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குள் வரும் நகரங்களுள் ஒன்றான கோவைக்கு மிகுந்த பயனளிக்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...