ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து மாநகர முன்னாள் காவல் ஆணையரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்- நீதிபதி ராஜேஸ்வரன்


கோவை, ஜனவரி 31

கோவை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட நால்வரிடம் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'கோவையில் 3-வது முறையாக விசாரணை நடத்த தற்போது வந்துள்ளோம். 3 நாட்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 



இன்று 6 பேர் விசாரணைக்கு வந்துள்ளனர். 2 பேர் வரவில்லை. கோவையைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பேரிடமும், நவம்பர் மாதம் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் 960-யில் 47 பேரிடமும் மதுரையில் 888-யில் 132 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் முதல் வாரம் மற்றும் கடைசி வாரம் விசாரணை நடத்தப்படும்.



ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ள 20 நிமிடம் ஆகும். வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் கால தாமதமாகிறது. கோவையைப் பொறுத்தவரை போலீஸ் ஆதரவாளர்கள் 21 பேரிடமும், போலீசார் 7 பேரிடமும், பொதுமக்கள் 14 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. நாளை முன்னாள் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், 2 உதவி ஆணையர்கள், 1 துணை ஆணையர் ஆகியோர் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக உள்ளனர். ஓர் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...