தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.
கோவை, ஜனவரி 29
தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

இந்த கலைப் பயணத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கங்கை கருங்குயில்கள் கலைக் குழுவினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர். 60 பேர் கொண்ட இந்தக் குழுவினர் மூன்று அணிகளாகப் பிரிந்து இருகூர், சிங்காநல்லூர், பட்டணம், காமநாயக்கன்பாளையம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

30 நாட்கள் நடைபெறும் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கொடியசைத்து பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் எதிர்ப்பு விழிப்புணர்வு கலைப் பயணம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.

இந்த கலைப் பயணத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கங்கை கருங்குயில்கள் கலைக் குழுவினர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர். 60 பேர் கொண்ட இந்தக் குழுவினர் மூன்று அணிகளாகப் பிரிந்து இருகூர், சிங்காநல்லூர், பட்டணம், காமநாயக்கன்பாளையம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

30 நாட்கள் நடைபெறும் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கொடியசைத்து பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.