சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்துகளை அறிவியல் நூலாக பதிவிட வேண்டும் - மாவட்ட வன அலுவலர் ந. சதிஸ்

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

கோவை, ஜனவரி 28

ஓசை அமைப்பின் 100-வது சூழல் சந்திப்பு நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட வன அலுவலர் ந.சதிஸ், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் பல இயற்கை அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பேசுகையில், "இது போன்ற சூழல் சந்திப்புகளில் பல தரப்பட்ட அறிஞர்களும், ஆர்வலர்களும் பேசியுள்ளனர். அவர்களுடைய கருத்துகளை அறிவியல் சார்ந்த தகவல்களை பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் சார்ந்த நூலாகப் பதிவிட வேண்டும்" என்றார்.



வாழ்த்துரை வழங்கிய பேரூர் ஆதினம் இளைய பட்டம் தவத்திரு மருதாச்சலம் அடிகளார் கூறுகையில், "குழந்தைகளை சமூக வலைதளங்களில் இருந்து காப்பாற்ற வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். இதனால் அவர்களது கவனம் மாடித்தோட்டத்தின் மீது திரும்பும். மாடித்தோட்டம் அமைப்பதினால் பசுமையை அனைவரும் நம் வீடுகளிலேயே விதைக்கிறோம்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஓசை காளிதாஸ் பேசுகையில், "இயற்கைக்கான குரலாக ஒலிக்கும் எமது செயல்பாடுகள் பதினெட்டாம் ஆண்டாகத் தொடர்கிறது. மக்கள் பங்களிப்போடுதான் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

அதன் ஒரு வடிவம்தான் சூழல் சந்திப்பு. அது இன்று 100-வது சூழல் சந்திப்பை எட்டியுள்ளது. கோவையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இயங்கும் பல அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் உருவாக சூழல் சந்திப்பு பெரும் காரணமாக இருந்துள்ளது" என்றார்.



இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இயற்கைக்காகப் பாடுபட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

Newsletter

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...