பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை, ஜனவரி 27
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

இதில், தி.மு.க. சொத்துபாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரம், ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், வி.எம்.சி. மனோகரன், எம்.என். கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கார்த்திகேயன், ம.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.ஆர். மோகன்குமார் உள்ளிட்ட 8 கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதியளித்தையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.