கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் இருவருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 25
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் இருவருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவின் தலை சிறந்த காவல் நிலையம் என்ற விருதினைப் பெற்று ஒட்டுமொத்த தமிழக காவல்துறையையும் பெருமைப்படுத்தியது.
இந்த நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கோவை மாநகர துணை ஆணையர் லட்சுமி மற்றும் மாநகர சைபர் கிரைம் பிரிவின் ஆய்வாளர் மல்லிகா-வுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்து விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.