திருப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் அதிரடியாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கியதன் மூலம், திருப்பூர் நீதிபதி அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டார்.
திருப்பூர், ஜனவரி 25
திருப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் அதிரடியாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கியதன் மூலம், திருப்பூர் நீதிபதி அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் (52) இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி அலமேலு நடராஜன் திருச்சி செயிண்ட்ஜோசப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் திருச்சி சட்ட கல்லூரியில் சட்டபடிப்பை முடித்தார். தனது அயராத முயற்சியால், 1991 ஆம் ஆண்டு நீதிபதியாக அலமேலு நடராஜன் பொறுப்பேற்றார். பின்னர் கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.
இதனிடையே, கடந்த 2015 ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டணை வழங்கி இந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார். இதன்மூலம், அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காணப்பட்டார்.
இவ்வாறு வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டு பிரபலமான அவரது மறைவு, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.