நீதிபதி அலமேலு நடராஜனை தமிழகத்திற்கு எடுத்துக்காட்டிய சங்கர் கொலையின் தீர்ப்பு

திருப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் அதிரடியாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கியதன் மூலம், திருப்பூர் நீதிபதி அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டார்.


திருப்பூர், ஜனவரி 25

திருப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் அதிரடியாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கியதன் மூலம், திருப்பூர் நீதிபதி அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டார். 

திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் (52) இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி அலமேலு நடராஜன் திருச்சி செயிண்ட்ஜோசப் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் திருச்சி சட்ட கல்லூரியில் சட்டபடிப்பை முடித்தார். தனது அயராத முயற்சியால், 1991 ஆம் ஆண்டு நீதிபதியாக அலமேலு நடராஜன் பொறுப்பேற்றார். பின்னர் கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 

இதனிடையே, கடந்த 2015 ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டணை வழங்கி இந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிபதி வழங்கினார். இதன்மூலம், அலமேலு நடராஜன் தமிழகத்திற்கு அடையாளம் காணப்பட்டார். 

இவ்வாறு வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டு பிரபலமான அவரது மறைவு, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...