கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய வாக்காளர் தினப் பேரணி

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.


கோவை, ஜனவரி 25

கோவையில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினப் பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வாக்களிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, பந்தயச் சாலை வழியாக தாமஸ் பூங்காவில் நிறைவடைந்தது.



இதைத் தொடர்ந்து, அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு, புதிய வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் அவர் வழங்கிக் கவுரவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...