பேருந்து பயண சீட்டு உயர்வு: மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் உருவ பொம்மை உருவாக்கிய தங்க நகை தொழிலாளி

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை, ஜனவரி 25

பேருந்து பயணச் சீட்டு உயர்வால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் கோவையைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி உருவாக்கிய உருவ பொம்மை வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் என பலவகைகளில் உருவச்சிலைகளை வடிவமைத்து வருகிறார்.

தற்போது, தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்தால் பலதரப்பட்ட மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், யு.எம்.டி. ராஜா பேருந்து பயணச் சீட்டுகளை கொண்டு கட்டண உயர்வால் மக்கள் அடைந்துள்ள வேதனையைக் குறிக்கும் வகையில் பயணச் சீட்டு தலை மேல் கை வைத்து அமர்ந்துள்ளது போல வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 10 பயண சீட்டுகளைக் கொண்டு இதை உருவாக்க ஒரு நாள் தேவைப்பட்டது. மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இதை உருவாக்கி உள்ளேன் என்றார்.



Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...