பேருந்து கட்டண உயர்வை கண்டித்து உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதகை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 24

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதகை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு அமலாகியுள்ளது. இதன்மூலம் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்தது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.17-ல் இருந்து ரூ.24-ஆக உயர்த்தப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வுக்குப் பின்பும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து.

இந்நிலையில் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இன்று உதகை மார்கெட் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழக அரசிற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில், நீலகிரி மவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, பேருந்து கட்டணத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...