மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக உதகை செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி, ஜனவரி 24
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக உதகை செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அடர் வனப்பகுதிகள் நிறைந்த மலைகள் சூழ்ந்துள்ள மாவட்டம் ஆகும். 60 சதவிகிதம் வனப்பரப்பை கொண்ட இந்த மாவட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
