முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை, ஜனவரி 23
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழக காவல்துறை காக்கி சட்டையை போட்டுக்கொண்டு தமிழக அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம். தங்களுடைய அணி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பேச்சைக் கேட்டு செயல்படும் கோவை மாநகர காவல்துறை தெருவில் நிற்கும். காலச்சக்கரம் மீண்டும் சுழலும்.
நாங்கள் பார்த்து உட்கார வைத்தவர்தான் தற்போதைய முதலமைச்சர். இந்த முதலமைச்சர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள்.
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி எடப்பாடி பழனிச்சாமியையோ, ஓ.பன்னீர் செல்வத்தையோ பிரதமர் மோடி தப்பித்தவறி கூட சந்திக்க மாட்டார். தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் டி.டி.வி. தினகரன் என பிரதமர் மோடி உணர்ந்து விட்டார்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவு என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுவது முற்றிலும் பொய். மீண்டும் மெரீனா கூட்டம் போல மாணவர் பட்டாளமும், இளைஞர் பட்டாளமும் தினகரன் பின்னால் திரண்டால் அரசால் தாங்க முடியாது.
தந்தை பெரியார் விருதைக் கொண்டு போய் கீழ்த்தரமான பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது. துணிவிருந்தால் நாளைக்கே உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிடுங்கள்.
இவ்வாறு புகழேந்தி பேட்டியளித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவையில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழக காவல்துறை காக்கி சட்டையை போட்டுக்கொண்டு தமிழக அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம். தங்களுடைய அணி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பேச்சைக் கேட்டு செயல்படும் கோவை மாநகர காவல்துறை தெருவில் நிற்கும். காலச்சக்கரம் மீண்டும் சுழலும்.
நாங்கள் பார்த்து உட்கார வைத்தவர்தான் தற்போதைய முதலமைச்சர். இந்த முதலமைச்சர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும். அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள்.
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி எடப்பாடி பழனிச்சாமியையோ, ஓ.பன்னீர் செல்வத்தையோ பிரதமர் மோடி தப்பித்தவறி கூட சந்திக்க மாட்டார். தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் டி.டி.வி. தினகரன் என பிரதமர் மோடி உணர்ந்து விட்டார்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவு என தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுவது முற்றிலும் பொய். மீண்டும் மெரீனா கூட்டம் போல மாணவர் பட்டாளமும், இளைஞர் பட்டாளமும் தினகரன் பின்னால் திரண்டால் அரசால் தாங்க முடியாது.
தந்தை பெரியார் விருதைக் கொண்டு போய் கீழ்த்தரமான பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது. துணிவிருந்தால் நாளைக்கே உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிடுங்கள்.
இவ்வாறு புகழேந்தி பேட்டியளித்தார்.