கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கோவை, ஜனவரி 23
கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (37). கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கொலை ஒன்றில் கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே, அவர் சிறை வளாகத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (37). கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கொலை ஒன்றில் கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே, அவர் சிறை வளாகத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.