திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
திருப்பூர், ஜனவரி 23
திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற உள்ள இதில், அமைக்கப்படவுள்ள 150 அரங்குகளில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறவுள்ளன.
கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 1 கோடியே 25 லட்சம் ரூபாயிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டது. இந்தாண்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற உள்ள இதில், அமைக்கப்படவுள்ள 150 அரங்குகளில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறவுள்ளன.
கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 1 கோடியே 25 லட்சம் ரூபாயிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டது. இந்தாண்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.