தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்ட அரசு பள்ளி சமையலறை- பெற்றோர்கள் புகார்

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 22

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மேலும், மாணவர்களுக்கான சத்துணவை தயாரிக்கப் பயன்படும் சமையலறையை வெளி நபர் ஒருவர் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்.

இதனால், மாணவர்களுக்கான உணவு திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் போதுமான பாதுகாப்பின்றி மாணவர்கள் உள்ளனர். உயர்கல்விக்காக தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் ஒரே ஒரு ஆரம்பப் பள்ளியிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...