நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை, ஜனவரி 22
நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மேலும், மாணவர்களுக்கான சத்துணவை தயாரிக்கப் பயன்படும் சமையலறையை வெளி நபர் ஒருவர் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்.
இதனால், மாணவர்களுக்கான உணவு திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் போதுமான பாதுகாப்பின்றி மாணவர்கள் உள்ளனர். உயர்கல்விக்காக தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் ஒரே ஒரு ஆரம்பப் பள்ளியிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மேலும், மாணவர்களுக்கான சத்துணவை தயாரிக்கப் பயன்படும் சமையலறையை வெளி நபர் ஒருவர் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்.
இதனால், மாணவர்களுக்கான உணவு திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் போதுமான பாதுகாப்பின்றி மாணவர்கள் உள்ளனர். உயர்கல்விக்காக தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் ஒரே ஒரு ஆரம்பப் பள்ளியிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.