பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 22

அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அண்மையில் தமிழக அரசு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸின் மனுவை வழக்காக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

அவரது மனுவில், தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கட்டண உயர்வுக்கு மற்ற மாநிலங்களைக் காரணமாக சொல்லாமல் தமிழக மக்களுக்கு இதில் என்ன நன்மை என்பதை பார்க்க வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கின்றனர். எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி சுப்பையா, மனுவை வழக்காக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்:

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, இன்று தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...