கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பறிமுதல்

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகமான வாகனங்கள் வருவதால் இம்மருத்துவமனையில் பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த சூழலில், ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்வதாக புகார் எழுந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை அம்மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை தொடங்கினர். அப்போது புற்றுநோய் வார்டின் முன்புறமும், மருத்துவமனையின் கேண்டீன் முன்புறமும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரண்டு கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார் கேட்பாரற்று இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...