பணிபுரியும் பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் வாகனம் வழங்கப்படவுள்ளது- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியானவர்கள் இன்று (ஜனவரி 22) முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 22

கோவை மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற தகுதியானவர்கள் இன்று (ஜனவரி 22) முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியம் ரூ.25000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். பயனாளிகளே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். வாகனம் 01.01.2018-க்கு பின்னர் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். 125 சிசி திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.

இந்த வாகனங்கள் பணிபுரியும் மகளிருக்கு வழங்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுய தொழில் செய்யும் பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், மாவட்ட கற்றல் மையம், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இத்திட்டத்தின்கீழ் இரு சக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் இருக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்து திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5 கடைசி நாளாகும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

இத்திட்டத்தின்கீழ் பயன் பெற கீழ்க்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வயதிற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வேலையின் தன்மைச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடமிருந்து பெற வேண்டும்), ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட - பழங்குடியினராக இருந்தால்) ஆகியவற்றை சமர்;ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...