வேலைவாய்ப்பினை உருவாக்க சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 863 பயனாளிகளுக்கு ரூ.1.42-கோடி மதிப்பில் தனி உரிமை நில அனுபவ ஆவணங்கள், வீட்டுமனைப்பட்டாக்கள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலை அறிவியல் கல்லூரி, அனைத்துப் பகுதிகளுக்கான குடிநீர் வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைவசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கிலே சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...