கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 21
கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் பேசியதாவது:-
நீதித்துறையில், நீதித்துறை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் செய்து வருகிறோம். வழக்குகள் தேக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ரத்தின சபாபதி பிள்ளை செய்த சமுதாய பணிகளை நினைவு கூறும் வகையில், தபால் உரை வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை செயல்படுவதற்கு, போலீசாரின் பங்கு முக்கியமாக உள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும், சட்டத்தை செயல்படுத்தவும் கடுமையாக உழைக்கின்றனர். நீதித்துறையானது, போலீசார் செயல்படுத்தும் சட்டங்களை கண்காணிக்கும் பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு, நீதிபதி பாஸ்கரன் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை தபால் துறை அதிகாரி சம்பத் ஆகியோர் பேசினர். ரோட்டரி கிளப் தலைவர் சாண்டிகோ ஜேசு, ரோட்டரி கிளப் திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் சுந்தரவடிவேலு மற்றும் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர்கள் சின்னகம் மன்னன், பெரியமவாதா, தலைமை காவலர்கள் ஆறுமுகம், சிந்தாமணி, சிந்து, ரவி சங்கர், தங்கராஜ், சுபா ஆகியோருக்கு நீதிபதி பாஸ்கரன் விருது வழங்கினார்.
கோயமுத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த டி.டி. ரத்தின சபாபதி பிள்ளையின், தபால் தலை மற்றும் தபால் உறை வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 போலீசாருக்கு விருது வழங்கும் விழா ஆகியவை, கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் பேசியதாவது:-
நீதித்துறையில், நீதித்துறை பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் செய்து வருகிறோம். வழக்குகள் தேக்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ரத்தின சபாபதி பிள்ளை செய்த சமுதாய பணிகளை நினைவு கூறும் வகையில், தபால் உரை வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை செயல்படுவதற்கு, போலீசாரின் பங்கு முக்கியமாக உள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும், சட்டத்தை செயல்படுத்தவும் கடுமையாக உழைக்கின்றனர். நீதித்துறையானது, போலீசார் செயல்படுத்தும் சட்டங்களை கண்காணிக்கும் பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு, நீதிபதி பாஸ்கரன் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை தபால் துறை அதிகாரி சம்பத் ஆகியோர் பேசினர். ரோட்டரி கிளப் தலைவர் சாண்டிகோ ஜேசு, ரோட்டரி கிளப் திட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் சுந்தரவடிவேலு மற்றும் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பாக பணிபுரிந்த ஆனைமலை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர்கள் சின்னகம் மன்னன், பெரியமவாதா, தலைமை காவலர்கள் ஆறுமுகம், சிந்தாமணி, சிந்து, ரவி சங்கர், தங்கராஜ், சுபா ஆகியோருக்கு நீதிபதி பாஸ்கரன் விருது வழங்கினார்.