நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நீலகிரி, ஜனவரி 21
நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 டிசம்பர் 30 ம் தேதியன்று மிக சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் ஓவியப்போட்டி, மாவட்ட விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற கபடி, பந்து எறிதல், தடகளம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 75 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தலைமையாசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் பேரிடர் காலங்களில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு, பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், கூடலூர் கோட்டாட்சியர் முருகைய்யன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாப்ரியா, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராம்குமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 டிசம்பர் 30 ம் தேதியன்று மிக சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் ஓவியப்போட்டி, மாவட்ட விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற கபடி, பந்து எறிதல், தடகளம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 75 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தலைமையாசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் பேரிடர் காலங்களில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு, பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், கூடலூர் கோட்டாட்சியர் முருகைய்யன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாப்ரியா, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராம்குமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.