அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும்: நடிகர் மயில்சாமி

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் மயில்சாமி முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பேருந்து கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் மக்கள் வருத்தத்துடன் பேசுவது மன வேதனையளிக்கிறது. 

அரசு மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கிறது. முதலில் மக்களுக்கு நல்ல பேருந்துகளை இயக்க வேண்டும். மக்கள் கடுமையான வருத்தத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு அரசை சரியான முறையில் கையாள தெரியவில்லை. அரசு என்பது மற்றொரு அரசுக்கு பணியக்கூடாது. ஆனால், தற்போது பணிகிறார்கள். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 கவிஞர் வைரமுத்து இரண்டாவது நாளே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் தனது தாய் என்று கூறிய பின்பும் தொடர்ந்து விமர்சிப்பது பைத்தியக்காரத்தனம். நடிகர் கமல்ஹாசன், கலாம் சமாதியிலிருந்து அரசியல் துவங்குவதை வரவேற்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் மாற்றம் உருவாகும். அதே வேளையில், அவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...