கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை, ஜனவரி 20
கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தடாகம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், மானை வேட்டையாடி, பையில் எடுத்துச் சென்ற இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தோலாம்பாளையத்தைச் சேர்ந்த சி. முருகேசன் (35), வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் (32) என்பது தெரியவந்தது.
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 5.5 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தடாகம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், மானை வேட்டையாடி, பையில் எடுத்துச் சென்ற இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தோலாம்பாளையத்தைச் சேர்ந்த சி. முருகேசன் (35), வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் (32) என்பது தெரியவந்தது.
வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 5.5 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.