வனப்பகுதியில் செடிகளை நட்டுவிட்டு பிளாஸ்டிக் கவா்களை விட்டு செல்லும் அவலம் - அலட்சியமாகச் செயல்படும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் செடிகளை நடவு செய்த தனியார் அமைப்புகள் பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்காமல் அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், ஜனவரி 20

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் செடிகளை நடவு செய்த தனியார் அமைப்புகள் பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டுச் சென்றனர். இதுபோன்ற செயல்களைத் தடுக்காமல் அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இப்பகுதி வனத்தில் உயிர் வாழ்கின்றன. இவை, வனத்தில் உள்ள இலை, பழங்கள் மற்றும் மூங்கில் உள்ளிட்டவற்றை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. 

வனத்துறை சார்பில் மரங்கள் வளர்க்கப்படுவது வழக்கம். இவைகள், குளிர்காலத்தில் செடிகள் நடப்பட்டுத் தானாக வளா்ந்துவிடும். தற்போது, மாவட்ட வன அலுவலர் முகமது சகாப் உத்தரவின் பேரில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் பல இடங்களில் செடிகளை நட உத்தரவிட்டு தனியாரிடம் வேலைகளை ஒப்படைத்துள்ளார். 

இதனிடையே, தனியார் அமைப்புகள் செடிகளை நட்டுவிட்டு பிளாஸ்டிக் கவா்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களைக் கொண்டு வனப்பகுதிக்குள் செய்ய வேண்டிய பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



"வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன. இதனால், வனப்பகுதிக்குள் எந்த ஒரு பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு செல்லாதவாறு வனத்துறையினர் சோதனைச் சாவடியில் தீவிரமாக வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர். ஆனால், பொதுமக்களை சோதனை செய்யும் அதிகாரிகள், வனப்பகுதிக்குள் செடிகளை நடுவதற்கு எடுத்து சென்ற 3,000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கவா்களை அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதனால், வனவிலங்குகள் அதனை சாப்பிட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபோனறு அலட்சியமாகச் செயல்படும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்," என சமூக ஆர்வலர் மூர்த்தி கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...