உதகையில் மந்தமாக நடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிகள்: வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை, ஜனவரி 20

உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இச்சாலை வழியாக தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மழைக்காலங்கள் இந்த அலுவலக சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீர் கால்வாய் பழுதுகாரணமாக சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி விடும். இதனால், வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், தற்போது இச்சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, சாலை தோண்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தோண்டப்பட்ட மண்களை நடைபாதையிலேயே கொட்டப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் சென்றுவர பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், நடைபாதையில் மண் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல இன்னல்களுக்கு மத்தியில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்த கதியில் நடைபெற்று வரும் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...