பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை, ஜனவரி 19
பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் இன்று கரூரில் இருந்து திருப்பூர் சென்று தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு-வின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவருக்கு இராமநாதபுரம் அடுத்துள்ள ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கினர்.
மேலும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலர்விழியின் கணவர் ஸ்டேன்ஸ் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து டிடிவி அணியில் இணைந்தனர். பின்னர், ஆத்துப்பாலம் பகுதியிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் இன்று கரூரில் இருந்து திருப்பூர் சென்று தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு-வின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவருக்கு இராமநாதபுரம் அடுத்துள்ள ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கினர்.
மேலும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலர்விழியின் கணவர் ஸ்டேன்ஸ் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து டிடிவி அணியில் இணைந்தனர். பின்னர், ஆத்துப்பாலம் பகுதியிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.