கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி, ஜனவரி 19
கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டி தனியார் சல்லிக் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் சல்லி துகள்கள் மற்றும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சுவாசக் கோலாரால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தூசி குடிநீரில் படிவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வீட்டுச் சாவியை ஒப்படைக்க முற்பட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டி தனியார் சல்லிக் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் சல்லி துகள்கள் மற்றும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சுவாசக் கோலாரால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தூசி குடிநீரில் படிவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வீட்டுச் சாவியை ஒப்படைக்க முற்பட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.