கூடலூரில் இயங்கி வரும் சல்லி கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 19

கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டி தனியார் சல்லிக் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் சல்லி துகள்கள் மற்றும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சுவாசக் கோலாரால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.



மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தூசி குடிநீரில் படிவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வீட்டுச் சாவியை ஒப்படைக்க முற்பட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...