போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல்துறைக்கு சமூகவலைதள கணக்குகள் தொடங்கத்திட்டம்- காவல் ஆணையர்

கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல்துறைக்கு சமூகவலைதள கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 19

கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல்துறைக்கு சமூகவலைதள கணக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், மாநகரின் சாலைகளில் அவ்வப்போது கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து நெரிசல் நிலவும் இடங்களை சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த கோவை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநகர காவல்துறைக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் தொடங்க இருப்பதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சமூக வலைதளங்கள்

கோவை மாநகரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் தொடர்பான விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சமூக வலைதளப் பக்கங்களில் எந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து உடனடியாக தெரிவிக்க முடியும். அதே போல், குற்றச் சம்பவங்களை தவிர்க்கும் முறைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் குறித்த அறிவுரைகளும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.

இதன்மூலம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு குற்ற சம்பவங்கள் வெகுவாக குறையும். அதோடு மாநகர காவல்துறையின் சமூகவலைதளத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை சுட்டிக்காட்ட முடியும். அதோடு, குற்றமில்லா மற்றும் விபத்தில்லா கோவையை உருவாக்குவதற்கான கருத்துக்களை பொதுமக்கள் பதிவு செய்ய முடியும்.

வாட்ஸ்-ஆப்

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் சில சமூக விரோதிகள் தவறாக நடக்க முயன்றால் அவர்கள் குறித்த புகார்களை உடனடியாக கோவை மாநகர போலீசாரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு அனுப்பலாம். விரைவில் அந்த தொலைபேசி எண் மாநகர பேருந்துகளில் குறிப்பிடப்படும். புகார்களை வாட்ஸ்-ஆப்'ல் குறுஞ்செய்தியாக அனுப்பலாம். புகார் கிடைத்ததும் சம்மந்தப்பட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் பேருந்தை வழிமறித்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரை கைது செய்வார்கள்.

இரவுக் காவல்

கோவையில் நடந்த ஏ.டி.எம் மைய கொள்ளையில் ஒரு தனியார் கால்டாக்சி ஓட்டுநர் கொடுத்த தகவல் போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உடனடியாக அனைத்து டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் இரவு நேர பாதுகாவலர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த முடியும்.

ஒவ்வொரு வார்டிலும் குடியிருப்பு வாசிகளின் ஒத்துழைப்போடு இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் சம்மந்தப்பட்ட வார்டில், ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...