வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்வபுரம் தேவேந்திர வீதியில் வசித்து வந்தவர் இராமாயி அம்மாள் (77). கடந்த 9-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனர்.

தொடர்ந்து, சுண்டாக்காமுத்தூர் சாலை, புட்டுவிக்கி பாலம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது மகன் சேகர் பாபு (27) என்பதும், மூதாட்டி கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகர் பாபு-வை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...