மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
கோவை, ஜனவரி 19
மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
கோவை சிலம்பாலையா அமைப்பு சார்பில் மகாகுரு சுழற்கோப்பைக்கான 5-ம் ஆண்டு சிலம்பாட்டப் போட்டிகள் வரும் 21-ம் தேதி புலியகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-
இப்போட்டிகளில் மினி சப்-ஜூனியர் (6 வயதிற்குக் கீழ்) சப்-ஜூனியர் (14 வயதிற்குக் கீழ்), ஜூனியர் (17 வயதிற்குக் கீழ்) மற்றும் சூப்பர் சீனியர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
கோவையில் பத்திற்கும் மேற்பட்ட சிலம்பாட்டக் குழுவினர் உள்ளனர். குழு போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் புலியகுளத்தில் உள்ள காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் அல்லது 9443118510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், 250 முதல் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் அன்று மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறும். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
கோவை சிலம்பாலையா அமைப்பு சார்பில் மகாகுரு சுழற்கோப்பைக்கான 5-ம் ஆண்டு சிலம்பாட்டப் போட்டிகள் வரும் 21-ம் தேதி புலியகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-
இப்போட்டிகளில் மினி சப்-ஜூனியர் (6 வயதிற்குக் கீழ்) சப்-ஜூனியர் (14 வயதிற்குக் கீழ்), ஜூனியர் (17 வயதிற்குக் கீழ்) மற்றும் சூப்பர் சீனியர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
கோவையில் பத்திற்கும் மேற்பட்ட சிலம்பாட்டக் குழுவினர் உள்ளனர். குழு போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் புலியகுளத்தில் உள்ள காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் அல்லது 9443118510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், 250 முதல் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் அன்று மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறும். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.