உதகையில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட கிராம மக்கள் கோரிக்கை

உதகை அருகேயுள்ள கிராமங்களில் பயிர்கள் மற்றும் நடைப்பாதைகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால், அச்சமடைந்துள்ள அப்பகுதி கிராம மக்கள் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர் .


நீலகிரி, ஜனவரி 18

உதகை அருகேயுள்ள கிராமங்களில் பயிர்கள் மற்றும் நடைப்பாதைகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால், அச்சமடைந்துள்ள அப்பகுதி கிராம மக்கள் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர் .

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக புலி, கரடி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும், குடியிருப்புகளையும், நடைப்பாதைகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் உதகையை அடுத்த உல்லத்தி மற்றும் கடநாடு ஊராட்சிக்குட்ப்பட்ட சக்திநகர், கவரட்டி, மல்லிக்கொரை, கீழ் மல்லிக்கொரை, காவிலோரை, ஒடயரட்டி, பெந்தட்டி, ஆலட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்ப்பட்ட கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.



கீழ் மல்லிக்கொரை கிராமத்தில் இன்று யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் அக்கிராமத்தில் உள்ள நடைப்பாதைகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அக்கிராமத்தில் இருந்து இரண்டு யானைகளையும் மசினகுடி ஊராட்சிக்குட்ப்பட்ட சொக்கநள்ளி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதாக வனத்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...