பியூஸ் மனுஷ் மீதான அவதூறு வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


கோவை, ஜனவரி 18

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

கோவை ஈசா மையம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது ஈசா அறக்கட்டளையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈசாவின் செயல்பாடுகள் குறித்தும் வேண்டும் என்றே அவதூறான தகவல்களை தெரிவித்து, பரப்பிக்கொண்டு இருப்பதாக முறையிட்டார். இதனையடுத்து, ஈசா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...