சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கோவை, ஜனவரி 18
சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கோவை ஈசா மையம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது ஈசா அறக்கட்டளையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈசாவின் செயல்பாடுகள் குறித்தும் வேண்டும் என்றே அவதூறான தகவல்களை தெரிவித்து, பரப்பிக்கொண்டு இருப்பதாக முறையிட்டார். இதனையடுத்து, ஈசா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.