அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு : போக்குவரத்து துணை ஆணையர் தகவல்

அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 18

அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவினாசி சாலை முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 

இந்த சாலையில், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதனால், நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அவினாசி சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அவினாசி சாலை சித்ரா சிக்னலுக்குப் பிறகு சின்னியம்பாளையம் பகுதியில் தான் சிக்னல் உள்ளது. இதற்கு இடைப்பட்ட தூரத்தில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் புதிய சிக்னல்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், "அவினாசி சாலையில் ஆய்வு மேற்கொண்ட போது சின்னியம்பாளையம் பகுதி அருகே அதிக விபத்துக்கள் நடப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, சித்ரா பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் பகுதிவரை புதிதாக நான்கு சிக்னல்கள் வரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் புதிய சிக்னல்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். மேலும், பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட அறிவுறுத்தியுள்ளோம். இதனால் 300 மீட்டர்களுக்கு அப்பால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பேரிகார்டு இருப்பது தெரியும்" என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...