விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த ஆண் தற்கொலை முயற்சி

விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 18

விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (38). இவருக்கும் கோவையை சேர்ந்த சீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக விவாகரத்து செய்ய சீதா முடிவு செய்ததாகத் தெரிகிறது. 

விவாகரத்து வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய்குமார் இன்று நீதிமன்றம் வந்தார். 

அப்போது, மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை உட்கொண்டு விஜய்குமார் தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...