மாநகராட்சி வரைவு வார்டு பட்டியலில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ மனு

கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தார்.

கோவை, ஜனவரி 17

கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தார்.



அம்மனுவில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவிகித வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க பரிசீலனை செய்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, அவைத்தலைவர் வே.நா.பழனியப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...