கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தார்.
கோவை, ஜனவரி 17
கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தார்.

அம்மனுவில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவிகித வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க பரிசீலனை செய்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, அவைத்தலைவர் வே.நா.பழனியப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தார்.

அம்மனுவில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவிகித வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க பரிசீலனை செய்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, அவைத்தலைவர் வே.நா.பழனியப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.