தனிக்கட்சித் தொடங்கும் முடிவில் ரஜினிக்கு குழப்பம்: உளவுத்துறை அறிக்கை

அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு காரணங்களால் தனிக்கட்சித் தொடங்குவது குறித்த தனது முடிவில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 17

அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு காரணங்களால் தனிக்கட்சித் தொடங்குவது குறித்த தனது முடிவில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிக் கட்சித் துவங்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உளவுத் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அத்துறையினர் தகவல்களை சேகரித்து அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ரசிகர்களோடு படம் எடுத்துக் கொள்வதாக ரஜினி அறிவித்ததும், எழுச்சியோடு சென்னைக்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர். அதை வைத்து ரஜினி தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். ரசிகர்கள் உற்சாகமாயினர். எப்படி அமைப்புகளை துவங்கி, கட்சியை துவங்குவது எனப் புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கட்சித் துவங்கப் போவதாக அறிவித்ததும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பலரும், தன்னைத் தேடி வருவர் என ரஜினி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரபலமான களப்பணியில் தேர்ந்த அனுபவம் உள்ள யாருமே, ரஜினி தரப்பை அணுகவில்லை. இதனால், ரஜினி தரப்பு உற்சாகம் குன்றி உள்ளது.

தேடி வரும் அனுபவஸ்தர்களை வைத்து கட்சி கட்டமைப்புகளை எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம் என கணக்குப் போட்ட ரஜினியின் எண்ணம் பொய்த்துப் போனதால், அப்செட் ஆகி உள்ளனர். ரஜினி தரப்பினரை அணுகிய சில திராவிட இயக்கத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், அவர்களை அனுமதிக்க ரஜினி விருப்பப்படவில்லை. ரஜினி தரப்பைத் தேடிச் சென்ற அவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

கட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பண பலம் உள்ள ரசிகர்மன்ற ஆட்கள் பெரிய அளவில் இல்லாதது யோசிக்க வைத்திருக்கிறது. கட்சித் துவங்குவதாக அறிவித்த பின்பும், நடிகர் கமல்ஹாசனும் கட்சித் துவங்கப் போவதாகவும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் துவங்கப் போவதாகவும் அறிவித்து இருப்பதும், ரஜினி தரப்பை ஏகத்துக்கும் குழப்பி இருக்கிறது.

ரஜினியும், கமலும் கட்சித் துவங்கினால் திராவிட இயக்கத்தின் மேல் அதிருப்தியில் இருக்கும் வாக்குகளில் பிளவு ஏற்படும் என ரஜினி தரப்பு அச்சப்படுகிறது. அதனால், ரஜினியோடு கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...